search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை"

    • மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
    • வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ் (வயது 27) கூலித் தொழிலாளி. இவருக்கும் காசிநாதன் மகள் ஷாலினி (வயது23 )என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    திருமணத்துக்குப் பின் சிறிது காலம் கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன.

    நேற்று நள்ளிரவு பிரகாஷ் மனைவி ஷாலினியுடன் சண்டை போட்டார்.

    பின்னர் கணவர் மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் தூங்க சென்றதாக தெரிகிறது.

    ஆனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிரகாஷ், மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் போலீசுக்கு பயந்து வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாக விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஷாலினி உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கணவர், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் ரேவதியிடம் சண்டை போடும் சத்தம் கேட்கும். நேற்று நள்ளிரவும் பயங்கர சத்தம் கேட்டது. வழக்கமான சண்டைதானே என்று நாங்களும் இருந்து விட்டோம். ஆனால் இப்படி ஒரு முடிவை ஷாலினி எடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றனர்.

    இதற்கிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    திருமணமாகி 4 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், உடையார்பாளையம் உதவி கலெக்டர் பரிமளம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார்
    • வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் சித்துவார்பட்டியை சேர்ந்த முருகன் மகள் ராஜேஸ்வரி(28). இவருக்கும் குபேந்திரராஜா என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் பெண்குழந்தை உள்ளது.

    ராஜேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனது தந்தை வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த பிரபாவதியை கணவர் மோகன் சமாதானம் செய்து வந்தார்.
    • விரக்தி அடைந்த பிரபாவதி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னை எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரபாவதி (வயது22) இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. பிரபாவதிக்கு அவரது மாமியார் லலிதா இடையே சமையல் செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த பிரபாவதியை கணவர் மோகன் சமாதானம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மருமகள் மாமியார் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் தனது தாய் லலிதாவிற்கு ஆதரவாக பேசி மனைவி பிரபாவதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த பிரபாவதி திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற எம்.ஜி ஆர் நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் பிரபாவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பிரபாவதிக்கு திருமணம் முடிந்து 2½ ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஒ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
    • இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி சினேகா(21). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. அப்போது இருந்தே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    இதுகுறித்து தனது தாயிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார். இந்த நிலையில் சினேகா வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அவர் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல்விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டு ள்ளது.

    • குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி 12வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் கூர்க்காவாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சுனிதா (20) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் திண்டுக்கல் நாயக்கர் புதுத் தெரு, சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுனிதா நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சுனிதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிணத்துக்கடவு:

    கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். இவர் முள்ளுப்பாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இந்த தம்பதிக்கு விக்னேஷ்(8), கனிஷ் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர்.நேற்று சரவணனுக்கு பிறந்த நாள்.

    இதனால் மகஸே்வரி தனது கணவருடன் கோவிலுக்கு செல்வதற்கு முடிவு செய்தார். இதற்காக காலையிலேயே எழுந்து தனது மகன்களை புறப்பட வைத்து பள்ளிக்கு அனுப்பினார்.

    பின்னர் கணவருடன் கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது சரவணன் வீட்டிற்கு குடிபோதையில் வந்தார்.

    இதனை பார்த்த மகேஸ்வரிக்கு கோபம் ஏற்பட்டது. பிறந்தநாள் அன்று கூடவா குடித்து விட்டு வருவீர்கள் என கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த மகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவ தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயணை அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லண்டனில் இருந்து பேசுவதாக ஏமாற்றிய மூசா டெல்லியில் இருந்தபடியே அஸ்வினியை ஏமாற்றியது தெரிய வந்தது.
    • டெல்லியில் தங்கி இருந்து மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வந்த மூசாவை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை ஓட்டேரியில் அழகு கலை நிபுணர் அஸ்வினி தற்கொலை சம்பவத்தில் நைஜீரியாவை சேர்ந்த மூசா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    லண்டனில் இருந்து பேசுவதாக ஏமாற்றிய மூசா டெல்லியில் இருந்தபடியே அஸ்வினியை ஏமாற்றியது தெரிய வந்தது. அவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய மூசா பின்னர் பரிசு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு சுங்க துறை அதிகாரி என்றும் பேசி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    இதனால் பயந்துபோன அஸ்வினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஸ்வினி தற்கொலைக்கு மூசாவின் மிரட்டல்களே காரணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் தங்கி இருந்து மோசடி சம்பவங்களை அரங்கேற்றி வந்த மூசாவை போலீசார் கைது செய்தனர். மூசாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதுபோன்று இளம்பெண்கள் பலரை ஏமாற்றி தினமும் ரூ. 1 லட்சம் வரையில் ஏமாற்றி பணம் பறித்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, மூசா ஆன்லைனில் பழகி ஏமாற்றுவதையே வாடிக்கையாக வைத்து செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பலரை ஏமாற்றி அவர் தினமும் பணம் பறித்து வந்துள்ளார். இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த வேறு யாரும் ஏமாற்றப்பட்டுள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    • அஸ்வினியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்தது தெரியவந்தது.
    • அந்த நபர் தான் வெளிநாட்டில் வசித்து வருதாகவும், அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    அழகு நிலையத்தில் பணியாற்றிவந்த அஸ்வினி என்பவர் ஓட்டேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அஸ்வினியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்தது தெரியவந்தது.

    அந்த நபர் தான் வெளிநாட்டில் வசித்து வருதாகவும், அஸ்வினியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

    பின்னர் அந்த நபர் 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக அனுப்பி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

    சிறுது நேரத்தில் அஸ்வினியைத் தொடர்பு கொண்டு சுங்கத்துறை அதிகாரிபோல் பேசிய மற்றொரு நபர் தான் கூறும் வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

    அஸ்வினி 25,000 ரூபாய் செலுத்தியதும் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு 45 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் இல்லாவிட்டால் போலீசார் வந்து கைது செய்துவிடுவார்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த அஸ்வினி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் டெல்லியில் இயங்கிவரும் நைஜீரிய நாட்டு சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    • திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் திலகா மிகவும் நட்பாக இருந்துள்ளார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பட்டி கிராமம் முருகன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன் காமராஜ். இவரது மகள் திலகா (வயது 20). நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் திலகா தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிக்கும்போது, இவருடன் படித்த சகதோழியான பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவியுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவர் இறந்ததில் இருந்து திலகா மனம் உடைந்து காணப்பட்டதாகவும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • புஷ்பவள்ளி இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னை:

    எம்.ஜி.ஆர்.நகர், ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அருண். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது27). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த புஷ்பவள்ளி நேற்று இரவு வீட்டில் உள்ள படுக்கைஅறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புளி யம்பட்டி கணக்கரசம்பாளை யத்தை சேர்ந்தவர் சீனி வாசன் (35). விவசாயி. இவருக்கும் கர்நாடகா மாநிலம் சம்ராஜ் நகர் கான கஹள்ளி பகுதியை சேர்ந்த மாதவ நாய்க்கர் மகள் பிரியா (30) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். சீனி வாசனுக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவி யையும், குழந்தையையும் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த பிரியா கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த கலைக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரியாவை மீட்டு சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சை க்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு பிரியா இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசில் பிரியாவின் தாய் ரத்னாம்மாள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் இறந்த தால் பிரியாவின் இறப்பு க்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ×